img 20260414 wa0029

கடலூர் மாவட்டம் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது

வடலூர் நகர செயலாளர் தங்க ஜோதிமணி மற்றும் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்தை ஏந்தியவாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர் பின்னர் வடலூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
தொடர்ந்து கேக் வெட்டி புரட்சியாளர் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஆர் சசி நகர பொருளாளர் பாலசுப்ரமணியம் நகர துணை செயலாளர் சக்திவேல் , காங்கிரஸ் துரை கணேசன் சமூக ஆர்வலர் ஸ்டீபன் பால்ராஜ்
கார்த்திகேயன் பாரதி வளவன் சாந்தகுமார் சிந்துமதி சரவணன் சத்தியசீலன் பூபாலன் வீர செல்வன் சதீஷ் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *