வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பறக்கும்படை தீவிர வாக்காளர் சோதனை ஈடுபட்டு வருகிறது, அந்த வகையில்குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்திதலைமையிலான குழுவினர்வடலூர் விருத்தாசல சாலையில் சபை அருகேதணிக்கை மேற்கொண்டபோது நேற்று மதியம்1.15 மணி அளவில் வடலூர் சபை அருகில்,ஊமங்கலம் வேப்பங்குறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த, தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவகண்டன்என்பவரிடமிருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, இதனைத் தொடர்ந்துகுறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் அலுவலர் தனலட்சுமியின் ஒப்படைத்தனர், அலுவலர்தனலட்சுமி ஆய்வுக்கு பின் குறிஞ்சிப்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. Post navigation வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்