குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கொடியேற்று விழா
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கொடியேற்று விழா நடந்தது.
குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட கொத்தவச்சேரி, ஆடுர், குறிஞ்சிப்பாடி, வடலூர், அம்பலவாணன்பேட்டை உட்பட தொகுதியில் பல இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கொடியேற்றி பேசினார். அம்பலவாணன்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திலகர், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். விருத்தாசலம் எம். எல். ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகி சக்கரையாஸ், வட்டார தலைவர்கள் ராஜா, ஜனார்த்தனன்,
நகர தலைவர்கள், குறிஞ்சிப்பாடி
வைத்தியநாதன், வடலூர்பலராமன், முருகன்,வடலூர் நிர்வாகிகள் வீரமணி, கணேசன், சம்பத்குமார், ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி நிர்வாகிகள் அம்சவேல், பாண்டியன், குமார், சேகர், சிவராஜ்
உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம்
கூறியதாவது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு நியாயம் இல்லை. ஜனநாயகம் இல்லை. பிரதமர் மோடி அரசு தவறு செய்து விட்டது. ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியதற்கு குஜராத்தில் தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதியை மாற்றி, நீதியை வழங்கியுள்ளனர். மகாத்துமாகாந்தி எம்.எல்.ஏ., எம்.பி ,கட்சி தலைவர் எந்த பதவியும் இல்லை. ஆனால் அவரிடம் லட்சிய பார்வை இருந்தது. அதே லட்சிய பார்வை ராகுல் காந்தியிடம் உள்ளது. அதனால் அவருக்கு பதவி ஒரு பிரச்சனை கிடையாது. காங்கிரசார் ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து தகவலை தெருமுனைபிரச்சாரம் செய்து மக்களுக்கு விளக்க வேண்டும். இன்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி 15 இடங்களில் பேசிய உள்ளேன்.மீதி 85 இடங்களில் மாவட்ட தலைவர் தலைமையில் பிரச்சாரம் நடைபெறும். வடலூர் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் , இவ்வாறு அழகிரிகூறினார்