“ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்” இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை; யார் தெரியுமா?

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதற்கு பின்னர் சமந்தா சினிமாவில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இடையில் மயோசிட்டிஸ் நோயாலும் பாதிக்கப்பட்டார். விஜயதேவகொண்டாவுடன் நடித்த குஷி படத்தைத்தொடர்ந்து பாலிவுட், ஹீரோ வருண் தவானுடன் இணைந்து நடித்து வந்த சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இந்த இணையத் தொடருக்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். ஓ.டி.டி.யில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கடந்த காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சமந்தா கூறியதாவது:-

Images 2024 01 04T003509.623

நான் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும்போது என் அம்மாவும், அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார்கள், நானும் நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தேன். 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி சென்றேன். ஆனால், நான் மேலும் படிக்க விரும்பியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக என் பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியவில்லை. இதனால் கிடைத்த வேலைக்கு சென்றேன் திருமண விழாக்களில் வரவேற்பாளர் வேலைக்கு செல்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் தருவார்கள். மேலும், குடும்ப வறுமை காரணமாக ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிட்டேன். உங்கள் பாதை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நீங்கள் எதை வேண்டுமானாலும் அதை கனவு காணுங்கள், அதை நீங்கள் அடைவீர்கள். அதில் நீங்கள் தோல்வியடைந்தாலும், விடாமுயற்சியை கைவிட்டு விடாதீர்கள், நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும் என்று கூறியுள்ளார்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial