ஆண்மைக்குறைவை மறைத்து திருமணம்; சித்ரவதை அனுபவிக்கும் பெண்!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் மீது கடக்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எனக்கும், 40 வயதான எனது கணவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 8-ந் தேதி நாசிக்கில் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு, எனது கணவர் ஆண்மை குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஆவணங்கள் எனக்கு அவரது வீட்டில் இருந்து கிடைத்தது. இதுகுறித்து கேட்டபோது அவர் முறையான பதில் கூறவில்லை. இந்தநிலையில் சமீபத்தில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது, அவர் ஆண்மை குறைவுக்கு சிகிச்சை பெற்றதையும், அதை மறைத்து திருமணம் செய்து கொண்டதையும் ஒப்புக்கொண்டார். மேலும் என்னை அவர் சித்ரவதை செய்து வந்தார். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்து திருமணம் செய்துகொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial