வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தமிழக செய்திதுறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

வடலூரிIMG 20231128 WA0329 300x225ல் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தமிழக செய்திதுறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமான வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் தமிழக செய்திதுறை அமைச்சர்

மு.பெ.சாமிநாதன், சாமிதரிசனம் மேற்கொண்டார்.

தொடர்ந்து சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள, சத்திய தருமச்சாலை, அணையா அடுப்பு, கல்பட்டையா சன்னதி,

ஆகியவற்றை பார்வையிட்டார்.

வடலூர் சத்திய ஞானசபை நிர்வாகத்தின் சார்பில் ஆணையாளர் ராஜா சரவணக்குமார், தலைமையில் ‘

சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் அமைச்சர் வருகையொட்டி வள்ளலாருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து பசித்தோருக்கெல்லாம் ஓய்வின்றி உணவு சமைத்து வழங்கப்பட்டு வரும் வள்ளலார் ஆரம்பித்து வைத்த அணையா அடுப்பில் விறகு கட்டைகளை போட்டு தொட்டு வணங்கினார்.

தொடர்ந்து வடலூர் அருகே உள்ள கருங்குழி பகுதியில் வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய இடம் மற்றும் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள வள்ளலார் சித்திபெற்ற, சித்திவளாகத்தில் உள்ளவள்ளலார் சித்திபெற்ற திருஅறை, அணையா தீபம்,ஆகிய பகுதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார், நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார்,திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் தமிழ் செல்வன், நகர மன்ற துணைத்தலைவர் சுப்புராயலு மற்றும்நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial