கடலூர் மாவட்டத்தில், போலிஸ் அதிரடி, நகைகடைகளில் பர்தா அணிந்து நகை திருடிச் சென்றவர்களை, மடக்கிப்பிடித்த போலீசார்

கடலூர் மாவட்டத்தில், போலிஸ் அதிரடி, நகைகடைகளில் பர்தா அணிந்து நகை திருடிச் சென்றவர்களை, மடக்கிப்பிடித்த போலீசார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார், உடன் வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேடையில் காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர். இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த தோட்ட ஊழியர் பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகடை ஒன்றிலும் நகை திருடியது தெரிய வந்தது. இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தனிப்படை போலீசார் ஆனந்த், ராஜி, கணேசமூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர். தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாகவில்லை. இருந்தாலும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது. விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு பவுன் தோட்டை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) எனவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு அந்த இரண்டு பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial