மருத்துவ செலவு செய்ய முடியாது என தந்தை சொன்னதால்; பிளஸ் டூ மாணவி தற்கொலை -உருக்கமான கடிதம் சிக்கியது!
சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. இவர் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகள் சவு மியா (வயது 17) அரசு மகளிர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.சவுமியாவிற்கு அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சவுமியாவை அவரது தந்தை மருத்துவ செலவு என்னால் செய்ய முடியவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த சவுமியா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்த போது சவுமியா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர் அதில்” இனிமேல் நான் உங்களுக்கு செலவு வைக்கமாட்டேன் எனக்கு செலவு செய்யும் பணத்தில் வீட்டை கட்டி முடிக்கவும் என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார் சவுமியா.