அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது
கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது இதன் தொடக்கமாக புதன்கிழமை கங்கை நீர் எடுத்து வந்து, சணபதி ஹோமத்துடன், அம்மன்
அபிஷேக ஆராதனையும் கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் திருத்தேர்உற்சவமும் மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று நான்காம் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் செடல் உற்சவமும் பகல் 12 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8 மணி அளவில் அம்மன் பூக்களால் அலங்கரித்து, பம்பை உடுக்கையுடன் மேளதாளம் முழங்க வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இன்று காலை 10:30 மணி அளவில் அம்மன் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5 மணிக்கு அம்மனுக்கு தாலாட்டு விழாவும், இரவு 7 மணிக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு மற்றும் குல தெய்வபக்தர்களும் செய்திருந்தனர்