Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blogஆன்மீகம்

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர்

By tamilnewsmedia0
August 24, 2026 1 Min Read
0

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர்

வடலூர், ஆ:வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ் பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தை நிறுவினார். இங்கு சத்திய தருமச்சாலை,சத்திய ஞான சபை உள்ளது.மேலும் கருங்குழி கிராமத்தில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த இல்லம், மேட்டுக்குப்பம் கிராமத்தில் சித்திவளாக திரு மாளிகை ஆகியவை அமைந்துள்ளது.வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி மாத ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஏழுதிரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஜோதி தரிசன பெருவிழாவை காண்பதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் காண கூடுவர்.இந்நிலையில் வள்ளலார் நிறுவிய தர்ம சாலையில் அணையா அடுப்பு மூலம் மூன்று வேளையும் வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சத்திய ஞான சபையில் நிறுவப்பட்டிருந்த கொடிமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழைய கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய கொடிமரத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்வதிபுரம் கிராம மக்களால் சுமார் ₹25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 8 மாதங்களாகப் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இன்று காலை சத்திய ஞான சபையில் அகவல் பாராயாணம் பாடப்பட்டு 8 மணி அளவில் 39 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்தினை பார்வதிபுரம் கிராம மக்களால் முறைப்படி நிறுவப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான வள்ளலார் பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற முழக்கத்துடன் புதிய கொடிமரத்தை நிறுவினர். மேலும் தொடர்ந்து புதிய கொடிமரத்தில் பீடம் மற்றும் செப்புத்தகடுகள் பதித்த பின்பு வள்ளலார் அவதரித்த நன்னாளும் மாதப்பூச நாளுமாகிய 05.10.2026 (புரட்டாசி – 18) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பார்வதிபுரம் அம்மன் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வதிபுரம் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூரில் கோயில் பூட்டை உடைத்து 10கிலோ வெள்ளி, வெண்கலப் பொருட்கள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme