சென்னையில் குறளகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது
சென்னை: குறளகத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, மண்டலம் 5 மற்றும் 6 பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், உழைப்பும் உரிமையும் இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இப்பேரணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.மாநில செய்தி