குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் பால்குட அபிஷேகம் நடைபெற்றது

  1. IMG 20230429 151929 300x171குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் பால்குட அபிஷேகம் நடைபெற்றது

செய்தி: தனுஷ்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள எஸ்.கே.எஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதற்காக குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன் குறிஞ்சிப்பாடி வீதிகள் வழியாக எஸ்.கே.எஸ் நகர் பகுதியில் உள்ள ஆனந்த விநாயகர் திருக்கோவிலுக்கு வந்து விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். . வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினார். முன்னதாக காலை ஏழரைக்கு திருக்கோவிலில் மகா கணபதி யாகம் செய்யப்பட்டு ஆனந்த விநாயகருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.மேலும் மங்கள இசை நிகச்சி விநாயகர் வேடமிட்டு நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial