மார்ச் 9 ல் கொடுக்கன் பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் போராட்டம் அறிவிப்பு

மார்ச் 9 ல் கொடுக்கன் பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் போராட்டம் அறிவிப்புFB IMG 1740569272469 300x150 FB IMG 1740569259106 300x150 FB IMG 1740569263748 300x150 FB IMG 1740569268560 300x150

கொடுக்கன் பாளையம் பகுதியில் விவசாயிகள் பல ஆண்டுகால வளர்த்து வந்த முந்திரி மரங்களை நிலத்தை கையகப்படுத்துகிறோம் என்று கூறி மாவட்ட நிர்வாகம் அராஜக வழியில் எந்திரங்களை வைத்து பிடுங்கி எறிந்த இடத்தில், மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொடுக்கன் பாளையத்தில் மக்கள் அனுபவித்து வந்த விலை நிலங்களில் இருந்த முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் பிடுங்கி எரிந்த நிலையில்,
விவசாய சங்கத் மாநில தலைவர் பி.சண்முகம் தலைமையில் அந்த கிராமத்தில் நேரில் சந்தித்து பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கடலூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளைக்கரை ஊராட்சி மலையடிகுப்பம், வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கம்பாளையம், கீரப்பாளையம், கட்டாராச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் 200 ஆண்டுகளுக்கு மேலாக 155 ஏழை விவசாய குடும்பங்கள், 164 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை மலைப்பகுதியில் சமன்படுத்தி பண்படுத்தி பயிர் செய்து வந்தனர்.

குறிப்பாக முந்திரி, வாழை, கரும்பு மலை பயிர்கள், பூக்கள் உள்ளிட்டவை பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்ட வருவாய் துறை 1905 சட்டத்தின் படி நில ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் காலி செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

அந்த நோட்டீஸிற்கு உரிய பதில் அளித்த பின்னர் மீண்டும் முன் தேதியிட்டு நோட்டீஸ் வெளியிட்டு அதை விவசாயிகளுக்கு நேரடியாக கொடுக்காமல் வினியோகம் செய்ததாக பொய் சொல்லி கடந்த 29.1.2025 அன்று 500 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினர். 20 க்கும் மேற்பட்ட ஜேசிபி கனரக இயந்திரங்கள் மூலம் முந்திரி மரங்களை உயிரோடு பிடுங்கி எரிந்தனர்.

தடுக்க முற்பட்ட விவசாய சங்க தலைவர்களையும் அரசியல் கட்சியினரையும் தரக்குறைவாக பேசி காவல்துறை மூலம் கட்டாயப்படுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள 22 பெண் விவசாயிகள் பெயரில் மனுதாக்கல் செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தடையாணை பெறப்பட்டது.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது ஆனால் இன்று வரை மாவட்ட ஆட்சியர் அது குறித்து எந்த முடிவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவருமான பெ.சண்முகம், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், துணைத்தலைவர் எஸ்.தட்சணாமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆள வந்தார், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மலை அடிக்குப்பம் கிராமத்தில் பிடுங்கி எறியப்பட்ட காய்ந்த முந்திரி மரங்களையும் பார்வையிட்டனர்.
பிறகு அந்த பகுதி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மார்ச் 9ம் தேதி எந்த நிலத்திலிருந்து முந்திரி மரங்கள் பிடுங்கப்பட்டதோ, அதே நிலத்தில் மீண்டும் முந்திரி கன்றுகள் நட்டு, நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial