Untitled post 156

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிக அர்ஜுன கார்கேவை இழிவு படுத்திய மோடி அரசை கண்டித்து நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பிஜேபி ஆளும் உத்தரகாண்ட் மாநிலம் ஹால் வாணி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய இடத்தை புனித நீரூற்றி கழுவிய ராம்சேனா இயக்கத்தையும் தொகுதி மறு வரை செய்ய முயற்சிக்கும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நெய்வேலி இந்திரா நகர் என்எல்சி ஆர்ச் கேட் ஏதிரே நடைபெற்றது

சந்திர கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்

M.P செய்தி தொடர்பாளர் R.குமார் பணித்தலைவர் INTUC D. ராமலிங்கம் எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் சா.கோ. சுபாஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் L.ஏழுமலை தில்லை நகர் சடகோபன், INTUC முன்னாள் துணைத் தலைவர் ராஜலிங்கம் மாநில பேச்சாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்
மேலும் நிகழ்வில் வழக்கறிஞர் ராம்குமார் மாவட்ட மகளிர் அணி அரசி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தின் போது
மோடி அரசை கண்டிக்கிறோம் மத்திய அமைச்சர் அமீர் சாவை கண்டிக்கிறோம்
மோடியை விரட்டுவோம் பிஜேபிஐ வீழ்த்துவோம் உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
நிகழ்ச்சியின் இறுதியில் ராசாகண்ணு நன்றியுரை வழங்கினார்