“திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு”
திடீரென கடல் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் , திருச்செந்தூரில் இன்று திடீரென கடல் 50 அடிக்கும் மேலாக உள்வாங்கியது. முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கடல் உள்வாங்கிய காட்சியை தங்களது மொபைல் போனில் புகைப்படங்கள் எடுத்து சென்றனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடலில் அழமானப்பகுதிக்கு சென்று குளித்து வந்தனர். இதையடுத்து பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.