வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா
வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா
கடலூர், மாவட்டம் வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கராத்தே தரவரிசை பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் தலைமையில் நிர்வாக இயக்குநர் தீபக் தாமஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்களின் உடல் உறுதி, தற்காப்புத் திறன், ஒழுக்கம் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் பள்ளியில் கராத்தே பயிற்சி ஜெயவேல் மற்றும் தெய்வகிருஷ்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கராத்தே தகுதித் தேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு புதிய வண்ணப்பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள்,மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.