கடலூர் மாவட்டம் மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமாநில உயர்மட்ட குழு உறுப்பினர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி மருந்து ஆய்வாளர் சுகன்யா , விருத்தாசலம் சரக மருந்து ஆய்வாளர் மாசேதுங் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்
வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று தனலட்சுமி திருமண மண்டபத்தில் நிறைவுற்றது
பேரணியின் போது மருந்து வணிகர்கள் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருளை ஒழிப்போம், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம், போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி கையில் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர் இறுதியில் நடைபெற்ற கருத்தங்கில் பண்ருட்டி தாலுகா சங்க தலைவர் சந்திரகுப்தா தலைமை தாங்கினார் வடலூர் சுதா மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் கலந்து கொண்டு போதை மருந்துகளுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களின் நல்வாழ்வுக்காகவும் சிறப்புரையாற்றினார்
மருந்து ஆய்வாளர்கள் உறையின் போது போதை பழக்கத்திற்கு அடிமையாகவும் மருந்துகளை கையாளும் முறைகள் குறித்து மருந்து மனிதர்களுக்கு அறிவுரை வழங்கினர்
தொடர்ந்து அனைவரும் போதை எல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் வடலூர் சையத், குறிஞ்சிப்பாடி விஜய்சேகரன்,அருள், மாவட்ட பொருளாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் தனுஷ்
