“காற்றழுத்த தாழ்வு பகுதி”தமிழகம், புதுச்சேரி மற்றும் காலைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்

“காற்றழுத்த தாழ்வு பகுதி”தமிழகம், புதுச்சேரி மற்றும் காலைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்

தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ள நிலையில்

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது,

தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் வணிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை ஞாயிறு (7-ந்தேதி ) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது 8-ந் தேதி ( திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

இதனால் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்,

இதன் காரணமாக இன்று சனி முதல் 9-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் சுற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *