நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் திருமதி.ராதா (வயது 38), திருமதி.பாக்கியம் (வயது 36), திருமதி.முத்துலட்சமி (வயது 36), திருமதி.உமா (வயது 35) திருமதி.சங்கீதா (வயது 30) மற்றும் திருமதி.சகிலா (வயது 30) ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி ஜெயந்தி (வயது 56), திருமதி.சாந்தி (வயது 45), திரு தாமஸ் (வயது 24) மற்றும் திரு மகேஷ் (வயது 23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial