அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையின் புதிய சுரங்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம்-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள
டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்த்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் உத்தேசிக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் 2.25.0 ஹெக்டேர் பரப்பளவில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது.இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள லால்குடியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல்;, வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம், புதுதில்லி, அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்;இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.செந்தில்குமார், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *